"வீரப்பன் காட்டுக்குள் பொதுமக்கள் செல்லலாம்
சென்னை:
சத்தியமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினரும், எல்லைப்பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளதால்பொதுமக்கள் யாரும் காட்டுக்குச் செல்லக் கூடாது என்ற தடை எதுவும் கிடையாது என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் தேடிப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினர், எல்லைப்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மலைவாழ் மக்களும் காட்டுப் பகுதியில் செல்ல போலீஸார் தடைவிதித்துள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கைகள் கூறுவது போல், பொதுமக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் போலீஸார் எந்த விதமான தடையையும் விதிக்கவில்லை.பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.