For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தபால் ஊழியர்கள் மீது அவசர சட்டம் பிரயோகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லி பிராந்தியத்தில் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் தபால் துறைஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அவசர கால பணி பராமரிப்புச்சட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. தபால் துறை ஊழியர்களின்போராட்டத்தையும் அது சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.

மாநில ஆளுநர் விஜய் கபூர் இந்த சட்டத்தைப் பிரயோகித்துள்ளார். இதன் படி, டெல்லிமற்றும் சுற்று வட்டாரத்தில் வேலைநிறுத்தம், ஊர்வலம், எதிர்ப்புப் போராட்டங்கள்நடத்தக் கூடாது. மீறி நடத்தினால், அவர்கள் மீது இந்த சட்டத்தின்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதத்திற்கு இந்த சட்டம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11-வதுநாளாக தபால் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்ததையடுத்து இந்தசட்டத்தை பிரயோகித்திருப்பதாக டெல்லி மாநில அரசு வட்டாரம் தெரிவித்தது.

ஏற்கனவே, தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைசட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X