கம்ப்யூட்டர் துறையில் தமிழர்கள் நம்பர் ஒன்!
வேலூர்:
தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில் மிகச்சிறந்து விளங்குகிறார்கள் என்று மத்திய கண்காணிப்புத்துறை ஆணையர் விட்டல் தெரிவித்தார்.
வேலூர் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிய பசிபிக் டெலிகாம் 2000 சர்வதேச மாநாடு, கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு விட்டல் பேசியதாவது:
கம்ப்யூட்டர் துறையில் நம் நாடு மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில்ஆதிக்கம் செலுத்துவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்தை பொருளாதார வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.
இன்டர்நெட் என்பது ஈ.காமர்ஸ், ஈ.கவர்மென்ட் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசுத் துறைகளிலும் இன்டர்நெட்பயன்படுத்தப்படவிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 65 ஆயிரம் இன்ஜினியர்கள் உருவாகிறார்கள். ஆனால் 30 லட்சம் பேர் ஆண்டு தோறும் தேவைப்படுகிறார்கள். இளைஞர்கள்கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றார் விட்டல்.