லண்டனில் அமிதாப் மெழுகு சிலை
டெல்லி:
"ஸ்டார் ஆப் தி மில்லனியம் ஆக பி.பி.சி. நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்திநடிகர் அமிதாப் பச்சனின், மெழுகு உருவ பொம்மை, புகழ் பெற்ற லண்டன் மேடம்துஸாத் மியூசியத்தில் டிசம்பர் 20-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
இந்திய திரையுலகைச் சேர்ந்த ஒரு கலைஞரது சிலை இந்த மியூசியத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். பொதுமக்களின் கருத்துக் கணிப்புக்குப் பிறகுஅமிதாப் பச்சன் உருவ பொம்மையை வைக்க முடிவு செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. அந்த வகையிலும் அமிதாப்பச்சன் தான் முதல் பிரபலம்.
துஸாத் மியூசியத்தில் மொத்தம் 400 உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுபொம்மைகள் இடம் பெற்றுள்ளன. நிஜ உருவத்தையே நேரில் பார்ப்பது போன்றஉணர்வை இந்த பொம்மைகள் ஏற்படுத்தும்.
உருவ பொம்மை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் லண்டன்செல்லவுள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு யாரும் அழைக்கப்படவில்லை என்றாலும்கூட, திறந்த பின் ரசிகர்கள் தன்னைச் சந்திப்பதற்கு வசதியாக 30 நிமிடங்கள் வரைமியூசியத்தில் இருக்க அமிதாப் பச்சன் ஒத்துக் கொண்டுள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம் திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை அமிதாப் பச்சன் நிரூபித்துள்ளார்.
லண்டனில் ஜூன் 24- ம் தேதி நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும்விழாவின்போது அமிதாப் உருவ பொம்மை திறப்பு குறத்து அறிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.