For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிசா. பாண்டியனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொலை வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமதுரை துணை மேயர் மிசா.பாண்டியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரையில் அக்டோபர் 18-ம் தேதி பைனான்சியர் முருகேசன் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் மிசா. பாண்டியனுக்கும் தொடர்பா இருப்பதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், மிசா பாண்டியன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.தற்போது அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வந்தபோது, மிசா பாண்டியன்சார்பில் ஆஜரான வக்கீல், துணைக் குற்றவாளியின் வாக்குமூலத்தை சாட்சியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முருகேசன் கொலை வழக்கில், வரிச்சியூர் செல்வம் என்பவர் துணைக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். இவரது கூற்றை ஏற்று, மனுதாரரைக் கைது செய்வதற்கு எந்தவிதமானமுகாந்திரமும் இல்லை என்றார்.

அரசுத் தரப்பு வக்கீல் வாதிடுகையில், கொலைச் சம்பவத்திற்கு முன்பும், நடந்த பின்பும்,மனுதாரரின் அலுவலகத்திற்குச் சென்று அவரை, குற்றவாள பார்த்துள்ளார். குற்றவாளிசரண் அடையும் வரை, மனுதாதரர் தனது அலுவலகத்திற்குச் செல்லவில்லை. குற்றவாளி,மனுதாரருடன் போனில் பேசியதை போலீஸார் பதிவு செய்துள்ளனர். எனவே மிசாபாண்டியன் தவறு செய்தது நிரூபனமாகிறது என்றார்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு மிசா பாண்டியனின் முன் ஜாமீன் மனுவைநிராகரிப்பதாக நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டார்.

பைனான்சியர் முருகேசனைக் கொலை செய்ய துணை மேயர் மிசா பாண்டியன்தான்உத்தரவிட்டார் என்று சரண் அடைந்துள்ள வரிச்சியூர் செல்வம் போலீஸில் வாக்குமூலம்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X