சீனாவிலிருந்து தரக் குறைவான பொருள் இறக்குமதி: அரசு கவலை
டெல்லி:
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தரம் குறைவான பேட்டரிகள்,பொம்மைகள், ஷூக்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
ராஜ்யசபையில், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் டாக்டர் ராமன் சிங்கூறுகையில், இந்திய மார்க்கெட்டுகளுக்கேற்ற தரம் உள்ளதா என்று இதுவரைசீனாவிலிருந்து வந்த 131 உற்பத்திப் பொருட்கள் சோதனை செய்துபார்க்கப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து தரம் குறைவான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியதொழில்துறை கவலை அடைந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிவுடன் கவனித்துவருகிறது என்றார்.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை:
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய வர்த்தகத் துறை துணைஅமைச்சர் ஒமர் அப்துல்லா பதிலளிக்கையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசுதடை விதிக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் திடீரென வெங்காய விலைகுறைந்தது. உள்ளூரில் ஏற்பட்ட விலைச் சரிவை சரி செய்வதற்காக, நவம்பர் மாத்ததின்முதல் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படவிருந்த வெங்காயம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது நிலைமை சரியாகி விட்டதால்த, நவம்பர் 14-ம் தேதி முதல் வெங்காயத்தைஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன என்றார்.