For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி நிறுவன வழக்கு .. ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை ஆர்.பி.எஸ். பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்திற்கு, வட்டி விகிதம் வழங்குவதில்விதிவிலக்கு அளித்தது தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ்வங்கிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் விதித்த உத்தரவில், டிசம்பர் 20-ம்தேதிக்குள், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், விதி விலக்குஅளித்ததற்கு முன்பு அதுகுறித்து எப்படி ரிசர்வ் வங்கி திருப்தியடைந்தது என்றவிவரங்களையும் வழங்குமாறு கேட்டுள்ளார்.

முன்னதாக, இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில், 1998-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில்,முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை நாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றுவிலக்கு அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த விதி விலக்கு தொடர்பாக முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X