பா.ம.க.விடம் கவனம் தேவை .. எச்சரிக்கிறது த.ரா.கா.
சென்னை:
தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள தோழமைக் கட்சியில் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற பாஜகவின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம்என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணைத்தலைவர் கிள்ளிவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய ஜனநாயகக் கூட்டணிய்ல தமிழக ராஜீவ் காங்கிரஸூம், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கின்றன.
சமீபத்தில் ஈரோட்டில் நடந்த பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அதாவது பாமகவும், தராகா வும் கூட்டணியில் தொடர வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். அடுத்த பொதுத்தேர்தலிலும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்போம்.மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டே பாமக, தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதை திமுக புரிந்து கொள்ளவேண்டும்.
பாமக, நேரடியாக திமுகவை விமர்சிப்பதால் பாமகவினருக்கு அதிமுக வில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கிள்ளிவளவன்.