தமிழர் ஆதரவு சட்டம் .. சந்திரிகா கூறுகிறார்
கொழும்பு:
இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய அரசியல் சட்டம்கொண்டு வரப்படும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதன்கிழமை தெரிவித்தார்.
தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு இல்லை. இருப்பினும் புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவைக்கொண்டு வர சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.
வேறு வழியில் அரசியல் சட்டத்தைக் கொண்டு வர சந்திரிகா முயன்று வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து பாரீஸில் நடந்த கூட்டத்தில் சந்திரிகாபேசுகையில், 2001 ம் ஆண்டு இந்த அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும். ஆகஸ்ட் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அதற்குமுன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாலும், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத காரணத்தாலும் சிறுபான்மையினருக்கு அதிகஅதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.
முன்னதாக, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி குறித்து நடந்த கருத்தரங்கில் சந்திரிகா பேசுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் சண்டைநிறுத்தம் அறிவிக்கத் தயார். ஆனால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம்கையெழுத்தாகும் வரை ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறங்கி விட்டோம். ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமுடன் இருந்தால்நாங்கள் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கத் தயாராக இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை அவர்களது நிபந்தனைகள் குறித்துஎங்களுக்கு எதுவும் தெரியாது என்றார் சந்திரிகா.
யு.என்.ஐ.