For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனைப் பிடிக்கத் தயார் .. தேவாரம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

எனக்கு அரசு அனுமதி தந்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனைப் பிடித்தே தீருவேன் என்று தமிழக முன்னாள் டிஜிபி தேவாரம் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வீரப்பனைப் பிடிக்க வேண்டுமானால் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும். 12 பேர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தனித்தனியாககாட்டுக்குச் செல்ல வேண்டும்.

வீரப்பனைப் பிடிக்கும் வரை காட்டுக்குள்ளேயே இருந்து அங்கு கிடைக்கும் உணவு வகைகளை மட்டும் உண்ண வேண்டும். ஹெலிகாப்டரில் இருந்து கொண்டுவீரப்பனைப் பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

கடந்த 94 ம் வருடம் வீரப்பனுடன் 5 பேர் மட்டுமே இருந்தனர். வீரப்பனுடன் தற்போது அதிகமாக இருக்கும் தீவிரவாதிகளுக்கு அதிகமாகக்காட்டைப் பற்றித் தெரியாது.

ஒவ்வொரு முறையும் வீரப்பனைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குச் செல்லும் போலீஸார் முதல் இரண்டு மாதங்கள் தீவிரமாகச் செல்கிறார்கள். பின்னர்திரும்பி விடுகிறார்கள்.

வீரப்பன் இலங்கைக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. அவர் காட்டிலேயே தான் இருக்கிறார். அவரைப் பிடிக்க இத்தனை கமாண்டோ படைகள்தேவையில்லை என்றார் தேவாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X