மாணவிகளை கற்பழித்த ஜோதிடருக்கு சிறை
பொன்னேரி:
மாணவிகளை கடத்திச் சென்று கற்பழித்த வழக்கில் ஜோதிடர் மாயவனுக்கும், அவரதுநண்பர் கோகுல கிருஷ்ணனுக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மாயவனின்காதலி கீதாலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகிலிருக்கும் எண்ணூ
அவர் நியூமராலஜியில் பிரபலமாக இருந்ததால் அதிக அளவில் தொழிலதிபர்களும்,அரிசியல் பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் பார்க்க வந்தனர்.
இதை பயன்படுத்திக் கொண்டு தொழில் அபிவிருத்திக்கும், அரசியலில் முக்கியபதவிக்கு உதவுவதற்கும் எந்திரத் தகடு எழுதித் தரும் ஜோதிடராகவும் அவர் மாறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஈரால் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்வர். அதேபகுதியில் வசித்து வந்தார். அவரது மகள் கீதாலட்சுமி (20) திருவொற்றியூரில்கம்ப்யூட்டர் வகுப்புகள் நடத்தி வந்தார். இவருக்கு மாயவனுடன் பழக்கம் ஏற்பட்டுஅவர் மேல் காதல் வயப்பட்டார்.
அவர் மாயவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள மாயவனை வற்புறுத்திவந்தார். அதற்கு மாயவன் தான் ஜோதிடர் பக்தி மார்க்கத்தில் இருப்பதால் தன் அருள்வாக்கு பலிக்க 10 பெண்களுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என கூறினார்.
கீதாலட்சுமி அவருக்கு உதவ முடிவு செய்து, மணலி புதுநகரைச் சேர்ந்த மாணவிகள்சாந்தி (16), தேவி மீனாட்சி (15) ஆகிய இருவருக்கும் கம்ப்யூட்டர் படிக்க உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை திருவண்ணாமலைக்கு கடத்திச்சென்றார். இதற்கு மாயவனின் இஞ்சினியர் நண்பர் கோகுல கிருஷ்ணாவும் உதவினார்.
கடத்தப்பட்ட மாணவிகள் தாங்கள் லாட்ஜில் தங்கவைக்கப்பட்டு மது கொடுத்துகற்பழிக்கப்பட்டதாக மணலி புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்துபோலீசார் கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி மாயவனையும், அவரதுகாதலி கீதாலட்சுமியையும் கைது செய்தனர்.
கோகுல கிருஷ்ணா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மாணவிகளை கடத்தஉதவியதாக கீதாலட்சுமியின் தந்தை கிருஷ்ணசாமி நாயுடுவும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மீது பொன்னேரி குற்றவியில் 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. விசாரனை நடந்து கொண்டிருந்த போது கீதாலட்சுமிக்குஆண் குழந்தை பிறந்தது.
இந்த வழக்கு பொன்னேரி சப்-கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 22சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வக்கீல்கள் வாதம் முடிந்த பின் வியாழக்கிழமை தீர்ப்புவழங்கப்பட்டது.
நீதிபதி அப்பாசாமி தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவி தேவி மீனாட்சி கடத்திச்சென்று கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என அந்த வழக்கை தள்ளுபடிசெய்தார்.
மாணவி சாந்தி கடத்திச் சென்று கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறிஜோதிடர் மாயவனுக்கு கடத்தல் குற்றத்திற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ 1,000 அபராதமும் கட்டத்தவறினால் ஒரு மாதம்சிறைத்தண்டனையும் விதித்தார்,
கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கோகுலகிருஷ்ணாவுக்கு 3 வருடம் கடுங்காவல்தண்டனையும், ரூ 1,000 அபராதமும் இதை கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
கற்பழித்தல் குற்றத்திற்காக மாயவனுக்கும், கோகுலகிருஷ்ணாவுக்கும் 10 வருடம்கடுங்காவல் தண்டனை விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும்தீர்ப்பளித்தார்.
கீதா லட்சுமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். கீதாலட்சுமியின் தந்தை மீதுபோதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.