"பாக். அமைதித் தீர்வுக்கு முயன்றால் வரவேற்போம்
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீடித்து வரும் பதட்டத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் வரவேற்கத் தயார் என்று இந்தியாகூறியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் பதட்டம் இருந்துவருகிறது. இதைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கூறும் எந்தத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள இந்தியா தயாராகஇருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் 7 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை சண்டை நிறுத்தம் செய்ய இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றது.
இந்தியாவுக்கு தீவிரவாதிகளிடம்ருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ஒடுக்குவதேமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாகும். மேலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதட்டத்தைத் தணிக்க பாகிஸ்தானின் எந்தத் திட்டத்திற்கும்இந்தியா தயாராக உள்ளது என்றார்.
பாக். கருத்து:
இதற்கிடையே பாகிஸ்தான் கருத்துத் தெரிவிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் போதுமான அளவு தனது ராணுவ வீரர்களை வாபஸ்வாங்கியுள்ளது என்ற அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தம் ஜனவரி மாதம் 26 ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர்வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் ரம்ஜான் மாதத்தையொட்டி பிரதமர் வாஜ்பாய் சண்டை நிறுத்தம் அறிவித்ததையடுத்து, பாகிஸ்தான் முடிந்த அளவு துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் என்றும் அறிவித்தது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.