For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன்: தீவிரவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பன் விடுவிக்கக் கோரிய 3 தீவிரவாதிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததுசெல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

சமீபத்தில் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி பின்னர் விடுவித்தார். ராஜ்குமார், வீரப்பன் பிடியில்இருக்கும் போது, அவரை விடுவிக்க வேண்டுமானால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் 5தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தார்.

ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கில் மணிகண்டன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். குள்ளஞ்சாவடி காவல் நிலையத் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் வெங்கடேசன். இவர்கள்உள்ளிட்ட 5 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்வைக்கப்பட்டனர்.

உறவினர்கள் மனுத் தாக்கல்:

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மணிகண்டன், சத்யமூர்த்தி,முத்துக்குமரன் ஆகிய 3 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் நாராயணா, பத்மநாபன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X