For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காது கேளாதவராக நடித்து வேலை பெற்றவர்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

காது கேட்காதவர் போல் நடித்து வாலிபர் ஒருவர் அரசு வேலை வாங்கியதை லஞ்ச ஒழிப்புபோலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஊட்டி நகராட்சியில் 1998-ம் ஆண்டு ஓவர்சியர் பதவி காலியாக இருந்தது. இந்தவேலைக்கு உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்குமுன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு கூறியிருந்ததது.

அதனடிப்படையில் நடந்த நேர்முகத் தேர்வில் ஆல்துரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் காது கேளாதவர் என்று கொடுத்த சான்றிதழின் பேரில் அவருக்கு உடல்ஊனமுற்றவர் என்ற முறையில் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு நன்கு காது கேட்கும் என்பது பின்னர் தெரியவந்தது. இதை அங்குவேலை செய்பவர்கள் பெரிதாக கருதவில்லை. ஆனால் ஊட்டியில் இருக்கும் சுரேஷ்என்பவர் இது தொடர்பாக டிரிப்யூனல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறைக்கு ஆல்துரைபணி நியமனம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆல்துரையை கோவையிலிருக்கும் பிரபலமருத்துவமனையில் சோதனை செய்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்குநன்றாக காது கேட்கும் என கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆல்துரைக்கு காது கேட்காது என சான்றிதழ் கொடுத்த மருத்துவரைவிசாரணை செய்தனர். அந்த மருத்துவர் தான் பரிசோதித்த போது ஆல்துரையின் காதுகேட்கும் ஒலி அளவு குறைவாக இருந்தது என கூறினார்.

இந்த பணி நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நகராட்சிகமிஷனர் மருத்துவர் கொடுத்த சான்றிதழின் படிதான் ஆல்துரைக்கு வேலைகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X