For Daily Alerts
Just In
ரூ. 10 லட்சம் வெளிநாட்டு மது பறிமுதல்
சென்னை:
சென்னையில் 5000 புத்தகப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 10 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு மதுபான வகைகளைப் போலீஸார்சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வடசென்னையில் உள்ள கோடவுன் ஒன்றில் வெளிநாட்டு மதுபான வகைகளான விஸ்கி மற்றும் ரம் ஆகியவைமறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்து அங்கிருந்த 6 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள். விசாரணையில்இந்த மது பான வகைகள் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது என்று தெரிய வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 24, 2000, 5:30 [IST]