டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி:
டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தான் ஆதரவ தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம்என்று அஞ்சப்படுவதால் தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி இணை போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா கூறுகையில், ரம்ஜானையொட்டி ஜம்மு காஷ்மீரில்அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் போவதாக பிரதமர் வாஜ்பாய்அறிவித்தார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளால் மேலும் ஆபத்துக்கள் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவமும்ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும்,போலீஸாருடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
இனிமேலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால்முடிந்த அளவுக்குப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். போலீஸாரும், ராணுவ வீரர்களும் இணைந்துபாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகையில், டெல்லி செங்கோட்டையில் உள்ளராணுவ முகாமில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் இன்னொரு ஊழியர்ஆகியோர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ள சண்டைநிறுத்த நீட்டிப்பை சீர்குலைக்கும் விதத்திலேயே இந்த தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சண்டைநிறுத்த நீட்டிப்பில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை.
இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று கருத்துக்கள்பரவலாக எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதற்கான வாய்ப்புக்கள்இல்லை என்றார்.
17 ம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜகான் 120 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்டமானசெங்கோட்டையை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.