For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள்.

இச்சம்பவம் குறித்து ராணுவ செய்திக் குறிப்பில், பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு மாருதிக்காரில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பிதாயீன் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் குறித்த அடையாளம்தெரியவில்லை. 7 ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X