For Daily Alerts
Just In
காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள்.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்திக் குறிப்பில், பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு மாருதிக்காரில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பிதாயீன் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் குறித்த அடையாளம்தெரியவில்லை. 7 ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]