For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணி: ராமதாசே முடிவு செய்யட்டும் .. கிருபாநிதி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பதை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ்தான்முடிவு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும். கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா,இல்லையா என்பதை பா.ம.க. தலைவர் ராமதாஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

வாழப்பாடி ராமமூர்த்திக்கும், ராமதாசுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு அவர்கள் சொந்த விஷயம்.இதில் தேசிய ஜனநாயக கூட்டணி செய்வதற்கு எதுவும் இல்லை.

தமிழக ராஜீவ் காங்கிரஸ் தே.ஜ.கூட்டணியில் நீடிக்கக்கூடாது என ராமதாஸ் நினைத்தால் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால்தே.ஜ.கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.

பா.ம.க. கூட்டணியை விட்டு விலகினால், வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. தே.ஜ கூட்டணி வெற்றிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ளதாக கூறுவது தவறு. தமிழகத்தில் பா.ஜ.க., தி.மு.க.தலைமையிலான கூட்டணியில்தான் நீடிக்கிறது.

பா.ஜ.க.வின் பலத்தை பொறுத்து வரவிருக்கும் தேர்தலில் இடங்கள் கேட்போம். த.மா.கா.தலைவர்பாளையங்கோட்டை மசூதியில் நடைபெற்ற கொலைக்கு பா.ஜ.கவை குறை கூறுவது தவறு. தற்போது போலீசார்அந்த கொலை வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மகனையே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் விஷவ ஹிந்து பரிஷத் ராமர் கோவில் கட்டுவதாக உள்ளார்கள் என கூறப்படுகிறது. அவர்கள்சட்டம், ஒழுங்கிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார்கள். நீதிமன்ற முடிவின் படியேமுடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சிலர், முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக கேரளாவிற்கு செல்லும் உணவை தடைசெய்து வருகின்றனர். இது கேரள மக்களை மிகவும் பாதிக்கும். முல்லை பெரியார் அணை விவகாரம்அரசியலாக்கப்படக்கூடாது. அணை பிரச்சனை விவகாரம் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும்.இல்லையென்றால் இது இரு மாநில மக்களையும் பாதிக்கும்.

தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது போல் முல்லை பெரியார் அணை உயரத்தை உயர்த்துமாறு பிரதமைர தமிழகபா.ஜ.க. வற்புறுத்தும் என அவர் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X