ஆயுட்கால தடையை எதிர்த்து வழக்குத் தொடர அசார் முடிவு
மும்பை:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் தலைவர் அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் இந்திய கிரிக்கெட் ஆணையம் மீது வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீனுக்கும், அஜய் ஷர்மாவுக்கும் ஆயுட் கால தடையும், மனோஜ் பிரபாகருக்கும், அஜய்ஜடேஜாவுக்கும் 5 ஆண்டு தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதித்தது.
இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் போர்டின் மீது அசாருதீன் வழக்கு தொடர உள்ளார்.
டெல்லியில் வழக்கு தொடர்ந்தால் அசாருதீன் அங்கு சென்று வர முடியாது. அதனால் அவர் ஹைதராபாத்தில் வழக்கு தொடருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளார். எனவே அசாருதீன் ஹைதராபாத்தில் வழக்கு தொடருவார் என அவரது சட்ட ஆலோசகரும், முன்னாள் மத்திய மந்திரியுமானபரத்வாஜ் தெரிவித்துள்ளார்.