For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரிமைகளைப் பெற சாதிய அமைப்புக்கள் தேவை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

உரிமைகளைப் போராடி பெற சாதி ரீதியான வலுவான அமைப்புகள் தேவை என கொங்கு வேளாளக் கவுண்டர்பேரவையின் தலைவர் தேவராஜன் தெரிவித்தார்.

ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில் தேவராஜன் கலந்து கொண்டுபேசியதாவது:

அரசியில் அங்கீகாரம் பெறவே கொங்கு மக்கள் கட்சியைத் துவக்கியுள்ளோம். முன்பு சாதி ரீதியான அமைப்புஇருந்ததால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது போன்றுவலுவான சாதி ரீதியான அமைப்புகள் இருந்தால் மட்டுமே கோரிக்கைகளைப் போராடிப் பெற முடியும். எதையும்வெல்ல முடியும்.

ஆனால், இப்போதுள்ள அரசியல் கட்சிகள் சாதியை அறவே ஒதுக்கும் சூழ்நிலை உருவாக்கி வருகின்றனர்.

பதவிக்காக நாங்கள் கொங்கு மக்கள் கட்சியைத் துவக்க வில்லை. இனத்தின் நலனுக்காக மட்டுமேதுவங்கியுள்ளோம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் இனம், விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டுள்ளது.இவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கிடைக்கவில்லை. இந்த பொருட்களுக்குஇவர்களே விலை நிர்ணயம் செய்யும் காலம் விரைவில் வரும்.

தற்போதுள்ள தனித் தொகுதிகளை மாற்றி அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும்என்றார்.

இந்தக் கூட்டத்தில், செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் சுத்தானந்தன், யதாவ சபை கோபாலகிருஷ்ணன்,தேவர் பேரவை ராமகிருஷ்ணன், தாயக மக்கள் கட்சித் தலைவர் ஜெயபால், பிள்ளைமார் பேரவை நிறுவனர்சரவணப் பொருமாள், வெள்ளாளஞ் செட்டியார் பேரவைத் தலைவர் முருகேசன், ரெட்டியார் சங்கத் தலைவர்ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X