For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபரின் சம்பளம் 2 மடங்காக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதிக்குக் கிடைக்கும் சம்பள விகிதம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ஜார்ஜ் புஷ் இனி ஆண்டுக்கு ரூ 1 கோடியே 84 லட்சம் சம்பளமாகப் பெறுவார். உலகிலேயேமிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழ்ந்து வரும் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு ஆண்டுஊதியமாக ரூ 11. 5 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதியின் சம்பளம் ரூ 46 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1969 ம் ஆண்டு அது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அப்போதைய ஜனாதிபதியாகஇருந்த நிக்சன் ஆண்டுக்கு ரூ 92 லட்சம் சம்பளம் பெற்றார்.

அதன்பிறகு கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனிமேல்ஜனாதிபதியாக வருபவர்கள் இனி ஆண்டுக்கு ரூ 1 கோடியே 84 லட்சம் ஊதியம் பெறுவார்கள்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் கிளின்டன் ரூ 92 லட்சம் மட்டுமே பெற்று வருகிறார். ஜனவரி மாதம் 20 ம் தேதி புதிய ஜனாதிபதியாகப்பொறுப்பேற்கவுள்ள ஜார்ஜ் புஷ் இந்த அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X