For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கோட்டைத் தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியை செவ்வாய்க்கிழமை அதிகாலை டெல்லி போலீஸார்சுட்டுக் கொன்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் செங்கோட்டையில் பணி புரியும் இன்னொருவரும் கொல்லப்பட்டார்.

இதையடுத்து தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்இறங்கிய தனிப்போலீஸ் படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு டெல்லி பாட்லா ஹவுசில் உள்ள முதலாவது மாடியில் தீவிர சோதனைமேற்கொண்டனர்.

இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிக்கும், போலீஸாருக்கும் அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சண்டை துணைப்போலீஸ் கமிஷனர் ராஜ்பீர் சிங் தலைமையில் நடந்தது. இறுதியில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.

துப்பாக்கி, கையெறி குண்டுகள் ஆகியவை அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. சில தஸ்தாவேஜூகள் மற்றும் ராணுவ சீருடைகள் ஆகியவையும் அங்கிருந்துகைப்பற்றப்பட்டன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X