For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பூஜைக்காக புலி நரபலி?

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

ஜெயலலிதா நடத்தியகாளி பூஜைக்காகத்தான் ஹைதராபாத் நேரு உயிரியல்பூங்காவிலிருந்த வெள்ளைப் புலி கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும தகவல்கள்வந்துள்ளன.

ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கும் நேரு உயிரியல் பூங்காவில் சாகி என்றபெண் புலி சென்ற அக்டோபர் மாதம் கொல்லப்பட்டு அதன் தோல் உரிக்கப்பட்டுகழுத்து அறுக்கப்பட்டு அதன் ரத்தம் பெருமளவு தேங்கிக் கிடந்தது. இந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு காரணமானவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தற்போது விசேஷ யாகத்திற்கு வெள்ளை புலி ரத்தம் உகந்தது என்ற மூட நம்பிக்கைகாரணமாக சாகி புலி கொல்லப்பட்டது எனவும், அந்த புலி ஜெயலலிதா நடத்தியபூஜைக்காகத்தான் கொல்லப்பட்டது எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாகி புலி கொல்லப்பட்டதற்கு மறுநாள் புலியின் ரத்தம் எடுத்துதச் செல்லப்பட்டுவாராங்கல் மாவட்டத்தில், ஹனுமகொண்டா ஊரில் இருக்கும் பத்ரகாளியம்மன்கோவிலில் பூஜை நடந்துள்ளது. கோவில் நிர்வாகம் பூஜைக்கு அனுமதி மறுத்ததால்பூஜை ரகசியமாக நடந்தது. இந்த பூஜையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரனும் கலந்து கொண்டார் என காளி கோயில் பூசாரி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மீது பல வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.வழக்குகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வெள்ளைப் புலியின் ரத்தம் கொண்டுபூஜை செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கை காரணமாக சாகி புலி கொல்லப்பட்டதுஎன ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பூஜை செய்யப்பட்ட கோயிலில் இருந்து ரத்தம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகம் ஏதும் தோன்றாமல் இருக்க ரத்தத்துடன் புலியின் தோலும் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதுஆந்திர போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடந்துவருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X