For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைசூரில் ஒரு அண்ணாமலை!

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

கர்நாடகத்தில் மாநகராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அலுவலகக் கார் வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூர் மேயர்ஆர்.நாராயண் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எனது கார் வாபஸ் பெறப்பட்டது. மைசூர்மாநகராட்சிக் கமிஷனர் ஹரிமனியவர், மேயரிடம் கொடுக்கப்பட்ட காரை வாபஸ் பெற உத்தரவிட்டார். அதாவது தேர்தல் நேரத்தின் போது அரசுசொத்துக்களை உபயோகிக்கக் கூடாது என்ற விதிமுறைப்படி அவர் இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார்.

ஆனால் மாநகராட்சித் தேர்தல் தொடர்பான நோட்டீஸ் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அரசு காரை வாபஸ் பெற கமிஷனர் உத்தரவிட்டது தவறு. இதுகுறித்து நான் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளேன்.

முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் மாநகராட்சி தேர்தல் குறித்து விரைவில் நோட்டீஸ் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் என்றார் மேயர் நாராயண்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X