For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆனந்த்துக்கு 6 லட்சம் டாலர்கள் பரிசு

By Staff
Google Oneindia Tamil News

டெஹ்ரான்:

விஸ்வநாதன் ஆனந்த் முறைப்படி உலக செஸ் சாம்பியனாக முடி சூட்டப்பட்டார். அவருக்கு 6,60,000 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றார். அவருக்கு புதன்கிழமை உலக சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்பெயின் செஸ் வீரர் அலெக்சி ஷிரோவுக்கு 4,40,000 டாலர்கள் பரிசு வழங்கப்பட்டது.

ஆனந்துக்கு அவரது தாய் சுசீலா விஸ்வநாதன்தான், ஆனந்தின் 6-வது வயதில் செஸ் விளையாட கற்றுக் கொடுத்தார். ஆனந்தின் வெற்றி குறித்து அவர்கூறுகையில், ஆனந்த் வெற்றி பெற்றது அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை காட்டுகிறது என்றார்.

சென்னையைச் சேர்ந்த ஆனந்த் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் காஸ்பரோவிடம் 1995-ம் ஆண்டு தோல்வி அடைந்தார். 1997-ம் ஆண்டுகார்போவிடம் தோல்வியடைந்தார். இப்போது வென்று விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X