சிறந்த தெற்காசிரியராக மல்லேஸ்வரி தேர்வு<
டெல்லி:
ஒலிம்பிக் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரி (25) 2000 வது ஆண்டின் தெற்காசியராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டைம் ஏசியா பத்திரிக்கை இவ்வாறு தேர்வு செய்துள்ளது.
2000 மாவது ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில கலந்து கொண்டு இந்தியா சார்பில் எடை தூக்கும் பிரிவில்கலந்து கொண்டார். இவர் 69 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்தார்.
இவருக்கு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் பெண் இவரே.
எடை தூக்கும் போட்டியில் 1990 ம் ஆண்டு முதல் தனது தனித்திறமையைக் காட்டி வருகிறார் மல்லேஸ்வரி. உலகஅளவில் நடக்கும் போட்டிகளில் 1990 ம் ஆண்டு கலந்து கொண்டு 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
1993 ம் ஆண்டு துருக்கியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1995 ம் ஆண்டுசீனாவில் நடந்த எடை தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.
இதே போல் அடுத்தடுத்து ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுதங்கப் பதக்கங்களை வென்றவர் மல்லேஸ்வரி.
யு.என்.ஐ.