For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆனந்துக்கு ஜன.3-ம் தேதி பாராட்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு சார்பில் வருகின்ற 3-ம் தேதி சென்னையில்பாராட்டுவிழா நடக்கிறது.

உலக செஸ் சாம்பியன் ஆனந்த் வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

விமான நிலையத்தில் அவரை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, விளையாட்டுத்துறை செயலாளர் அசோக்வர்தந் ஷெட்டி ஆகியோர் வரவேற்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வருகின்ற 3-ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் அன்று மாலை ஆறு மணிக்கு விழா நடக்கிறது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதிதலைமை தாங்கி விஸ்வநாதன் ஆனந்தை பாராட்டி பரிசுகள் வழங்குகிறார்.

விழாவில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் துணைத் தலைவர்டாக்டர் சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு செஸ் கழகத் தலைவர் டாக்டர் என்.மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X