For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. யாகத்தில் புலி நரபலியா? .. "விசாரிக்க 2 குழுக்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

ஹைதராபத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கொல்லப்பட்ட சகி என்ற பெண் புலி விவகாரம் குறித்து விசாரணைநடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

ஊட்டியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஹைதராபாத் ஊயிரியல் பூங்காவில் பெண் புலி கொல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 2 கமிட்டிகள்அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கவேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சுதாகரன் இதை மறுத்துள்ளார். புலி விவகாரம் குறித்து ஆந்திரஅரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிகளவு மாசடைந்த ஊட்டி ஏரியை சுத்தப்படுத்த மத்திய அரசு உதவி செய்யத்தயாராக இருக்கிறது.

நாட்டில் சுற்றுப்புறச் சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளிகளில் பசுமைப்படை என்ற விழிப்புணர்வு குழுவை நியமிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மனித வள மேம்பாட்டுத்துறைஅமைச்சகமும் முடிவு செய்துள்ளது.

இந்தப் பசுமைப்படையில் 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தஇருக்கின்றனர் என்றார் பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X