கன்னட அமைப்புகள் எதிர்ப்பு ..ரத்தானது நெடுமாறன் விழா
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்த நெடுமாறனுக்கு பெங்களூரில் நடைபெற இருந்தபாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
சந்தன வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 108 நாட்களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார்.
ராஜ்குமார் விடுதலைக்கு உதவிய நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவைசுகுமாறன் ஆகியோருக்கு ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் பாராட்டு விழாநடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த பாராட்டு விழா பெங்களூரில் இருக்கும் நேஷனல் கல்லூரி மைதானத்தில்நடத்தப்பட இருந்தது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ராஜ்குமாரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த விழாவை நடத்துவதற்கு பல கன்னட அமைப்புகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. இதை மீறி விழா நடத்தினால் அதை நாங்கள் தடுப்போம். அதனால்ஏற்படும் விளைவுகளுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அந்தஅமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதன் காரணமாக நெடுமாறனுக்கு நடத்தப்படவிருந்த பாராட்டு விழா ரத்துசெய்யப்பட்டு விட்டது.
இது குறித்து ஃபிலிம் சேம்ப் ஆஃப் காமர்ஸ் தலைவர் கே.சி. என். சந்திரசேகர்கூறியதாவது:
ராஜ்குமாரை விடுவிக்க பாடுபட்ட நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன்ஆகியோரை சென்னைக்கு சென்று பாராட்ட திட்டமிட்டிருக்கிறோம் எனதிட்டமிட்டிருக்கிறோம். இதற்காக அவர்களிடம் தேதி கேட்டிருக்கிறோம் என கூறினார்.