"காஷ்மீருக்குள் நுழைய தயார் நிலையில் நூற்றுக்கணக்கில் தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்:
காஷ்மீருக்குள் நுழைவதற்காக நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்காத்திருக்கின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டிருந்த சண்டைநிறுத்தத்தை ஜனவரி 26 ம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டார் பிரதமர் வாஜ்பாய். இந்த சண்டை நிறுத்தம் குறித்தும், சண்டை நிறுத்தத்திற்குப் பின் ஜம்முகாஷ்மீர் நிலவரம் குறித்தும் விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஜம்முவிலுள்ள ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு குறித்து நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், வன்முறைகள் காரணமாக கடந்த 11ஆண்டுகளில் 25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதும், ரன்பின்சிங்கபுரா மற்றும் சுந்தேர்பானி ஆகிய இடங்களில்தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதுதவிர எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில்நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைவதற்காக பதுங்கியுள்ளனர்.
சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட 31 நாட்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் எண்ணிக்கை 261. இந்தத்தாக்குதல்களில் 98 பேர் இறந்தனர். 219 பேர் காயமடைந்தனர். இதுதவிர, 3 போலீஸ்காரர்கள் உள்பட 29 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் 46 தீவிரவாதிகள் இறந்தனர். 115 ராணுவ வீரர்கள்காயமடைந்தனர் என்றார் அப்துல்லா.
இந்தக் கூட்டத்தில் நவம்பர் 28 ம் தேதி முதல் அமலுக்கு வந்த சண்டைநிறுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவைகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.