For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மகரவிளக்கு: சபரிமலை நடை திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

பத்தினம்திட்டா:

புத்தாண்டு தினத்தன்று மகர விளக்கு கொண்டாடப்படுவதால் திங்கள்கிழமை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்

மேல்சன்னதி சம்பு நம்பூதிரி நடையைத் திறப்பார். சபரிமலைக் கோவிலில் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் பூஜைகள் எதுவும் நடைபெறாது.

ஜனவரி 2 ம் தேதி அதிகாலை முதல் பூஜைகள் நடைபெறும். மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14 ம் தேதி நடைபெறும். ஜனவரி 11 ம் தேதிஎரிமேலியிலுள்ள பொன்னம்பலத்தில் மகர விளக்கு ஜோதியைக் காணலாம். முன்னதாக ஜனவரி 12 ம் தேதி அம்பலப்புழாவிலிருந்துவரவழைக்கப்பட்ட இசை வல்லுநர்களின் இசை இசைக்கப்படும்.

பம்பா விளக்கு மற்றும் பம்பா சத்யா ஆகியவை ஜனவரி 13 ம் தேதி கொண்டாடப்படும். ஜனவரி 14 ம் தேதி மகர ஜோதி விளக்கு பூஜை அதிகாலை5.15. மணிக்கு ஆரம்பமாகும். அப்போது ஐயப்பசாமி சிலைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.

மாலையில், தீபாராதனை நடைபெறும். அதற்குப்பின் ஜனவரி 18 ம் தேதி வரை ஐயப்பசாமி சிலைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் ஜனவரி 20 ம்தேதி ஐயப்ப சாமி கோவில் நடை மூடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X