ஜைன துறவியாக மாறும் சென்னை இளம்பெண்
சென்னை:
சென்னைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஜைன துறவியாக மாறுகிறார்.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமா பந்தாமோத்தா (23). இவர் பிளஸ் டூ வரைபடித்துள்ளார். இவர் ஜைனமதத் துறவியாக பிப்ரவரி 18ம் தேதி மாறுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஆகோர் என்றஇடத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி துறவியாகிறார்.
துறவறம் மேற்கொள்ளும் முன்பு அவரது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விடை பெறும் நிகழ்ச்சி நடக்கும்.இதற்காக அவரது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார் ஹேமா. இவர் இங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜெயின் மதவிழா ஒன்றில் கலந்து கொண்டார்.
பிளஸ் டூ வரை படித்திருக்கும் இவர், இதற்கு முன்னர் அவரது உறவுப் பெண்கள் இருவர் துறவரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இவரும் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இவரது உறவினர்களில் இதுவரை நான்குபேர் துறவரம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இவரது தந்தை கமல் சரித் மேத்தா, கெமிக்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தாயர்,தாயாபாய். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவர்களில் 3 பேர் பெண்கள். 2 பேர் ஆண்கள்.