கோவையில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், கடந்த ஆண்டு களவு போன ரூ. 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். 30 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மண்டல டி.ஐ.ஜி.,ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், கடந்த ஆண்டு ரூ. 5 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்களவு போயிருந்தன. இவற்றில் ரூ. 4 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ. 3 கோடியே 8 லட்சம் ம திப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதில், 2கோடியே 52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2 535 திருட்டுகள்நடந்துள்ளன. இதில், 1937 திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயின. இதில் ஒருகோடியே 17 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரை கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுஅடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 மாவட்டங்களிலும் நடந்த விபத்துகளில் 1103 பேர் இறந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நடந்த 5ஆயிரத்து 319 விபத்துகளில் 613 பேர் பலியாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் 65 கொலைகளும், ஈரோட்டில் 46 கொலைகளும், நீலகிரியில் 13 கொலைகளும் மொத்தமாக 124 கொலைகள் நடந்துள்ளன என்றார்.