For Daily Alerts
Just In
மத்திய அமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா
டெல்லி:
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸூக்கு அனுப்பி, அதை பிரதமர் வாஜ்பாயிடம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, சமதா கட்சியை, ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமதா கட்சி அதிருப்தியாளர்கள் வெளியேற உள்ளனர். அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்தஎம்.பி.பிரபுநாத் நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முடிவை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். சமதா கட்சிக்கு லோக்சபாவில் 11 எம்.பி.க்கள் உள்ளனர்.அதில் 7 பேர் அதிருப்தியாளர்கள்.
கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, January 4, 2001, 5:30 [IST]