எஸ்.டி.டி கட்டணம் குறைப்பு
டெல்லி:
200 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கான எஸ்.டி.டி.கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. மாத வாடகை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
மத்திய அரசு டெலிபோன் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கானடெலிபோன் கட்டணம் 8 ல் ஒரு பங்காக குறைக்கப்படுகிறது.
அதாவது முன்பு 8 ரூபாய் கொடுக்க வேண்டி வந்தால் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். இதே போல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கானடெலிபோன் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பின் மூலம் எஸ்.டி.டி. வசதி இல்லாத சந்தாதாரர்கள் இனி 200 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளூர் டெலிபோன் கட்டணத்தொகையிலேயே பேசிக் கொள்ள முடியும்.
ஊரக பகுதிகளில் உள்ள டெலிபோன்களுக்கான மாத வாடகைக் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போல்நகர்ப்புற பகுதிகளில் குறைந்த அழைப்புகள் கொண்ட டெலிபோன் வாடகைக் கட்டணம் 20 ரூபாயில் இருந்தால் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுஇருக்கிறது.
டெலிபோன் வாடகை கட்டணம் உயர்த்தப் பட்டு இருப்பதன் மூலம் ரூ 450 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
ஐ.ஏ.என்.எஸ்.