For Daily Alerts
Just In
நிலநடுக்கம்: குலுங்கியது கோவை
கோவை:
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் காலை 8.15 மணிக்கு சோமனூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி, புளியகுளம் ஆகிய இடங்களிலும், உடுமலைப்பேட்டையில்ஐஸ்வர்யா நகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 2 வினாடிகள் நீடித்தது. உடுமலைப்பேட்டையில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்து மக்கள் அனைவரும் வெளியேற ஓடஆரம்பித்தனர்.
சோமனூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் ஜன்னல்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் நொறுங்கின.
இருப்பினும் உயிர்ச்சேதமோ மிகப்பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, January 7, 2001, 5:30 [IST]