சின்னபிள்ளைக்கு பொற்கிழி வழங்குகிறது தமிழக அரசு
சென்னை:
பிரதமரால் ஜீஜாபாய் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட சின்னபிள்ளைக்கு தமிழக அரசு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறது.
சமூகநலப் பணியில் சிறப்பாக சேவை செய்ததற்காக இந்தியாவில் 5 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கிபாராட்டினார்.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த சின்னபிள்ளை என்ற பெண்மணிக்கு ஜீஜாபாய் விருது வழங்கி பிரதமர் கவுரவித்தார். சின்னபிள்ளையின் காலை கும்பிட்டார். இந்தசம்பவம் அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்தது. அந்த பெண்மணி இப்போது முக்கிய பிரமுகராக அனைவராலும் கருதப்படுகிறார்.
தற்போது தமிழக அரசு அவருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறது. இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த மாதம் நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் முதல்வர் கருணாநிதி சின்னபிள்ளைக்கு பொற்கிழி வழங்கி பாராட்டுகிறார் எனகூறப்பட்டிருக்கிறது.