சப் - இன்ஸ்பெக்டர் தேர்வு நிறுத்திவைப்பு
பாண்டிச்சேரி:
போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகளை அடுத்து பாண்டிச்சேரியில் தற்காலிகமாக சப்-இன்ஸ்பெக்டர்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாண்டிச்சேரியில் தற்போது சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சில பத்திரிக்கைகளில்செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து தற்போது டெல்லியில் உள்ள பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், அங்கிருந்து பாண்டிச்சேரி முதன்மை செயலாளரை தொடர்பு கொண்டு சப் - இன்ஸ்பெக்டர்தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.