காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை?
ஆஸ்லோ:
உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற விருதாகக் கருதப்படுவது நோபல் சமாதான பரிசு ஆகும். சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர்1901 ம் ஆண்டு இந்தப் பரிசை உருவாக்கினார்.
சமாதானத்துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நோபல் அமைப்பின் இயக்குநர் லுன்டஸ்டட் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்தகட்டுரை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
20 ம் நூற்றாண்டில் நோபல் பரிசு பெற்றவர்களில் ஒரே ஒரு முக்கியமான மனிதரினஅ பெயர் இடம் பெறாமல் போய் விட்டது. அவர் தான் மகாத்மாகாந்தி.
அவருக்கு நிச்சயமாக அந்தப் பரிசு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.
இங்கிலாந்துக்கும், நார்வே நாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்றுப் பூர்வமான தொடர்பால்தான் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசுவழங்கப்படவில்லை என்று கருதுகிறேன்.
நோபல் பரிசு கமிட்டிக்கு காந்திஜியின் பெயர் 5 முறை சிபாரிசு செய்யப்பட்டது. 1948 ம் ஆண்டு அவருக்குப் பரிசு கொடுக்க முடிவு எடுத்து இருந்தனர். அதற்குள்அவர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவது இல்லை என்று 1961 ம் ஆண்டு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதால் காந்திக்கு அந்தப் பரிசைகொடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று லுன்டஸ்டட் எழுதி இருக்கிறார்.