For Daily Alerts
Just In
கோவையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
கோவை:
கோவையில் பொது அமைதிக்கு ஊறு விளைவித்த 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை பி.கே புதூரைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் கோகுலம் காலனியில் மாமூல் வசூலித்து கடைகளில் அட்டகாசம் செய்து வந்தார். இதேபோன்று பல்லடத்தைச் சேர்ந்த பவுன் (24) என்பவரும் பல்வேறு திருட்டுக்கள் உட்பட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.
சென்னிமலையாம்பாளையத்தைச் சேர்ந்த கோபால் (38), என்பவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுசிறையில் இருந்தனர்.
தொடர்ந்து இவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதால், மாவட்ட எஸ். பி., இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின் பேரில், 3 பேரையும் மாவட்ட கலெக்டர் சந்தானம், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]