For Daily Alerts
Just In
புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கைது
சென்னை:
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் 50 பேர்போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், புதிய தமிழகம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சித் தொண்டர்கள் போராட்டம்நடத்த முயன்றனர். சிலர் பாரிமுனை முன்னும், சிலர் எழும்பூரிலும் போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டம் நடத்த முயன்ற 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் போராட்டம் நடத்துவதற்குப் போலீஸாரிடம் உரிய அனுமதி வாங்காததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 11, 2001, 5:30 [IST]