பிரபாகரனைச் சந்திக்க மாட்டேன் ... நார்வே தூதர்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க மாட்டேன் என்று நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கூறினார்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழு கடந்த அக்டோபர் மாதம் கொழும்பு சென்று சமரச பேச்சுவார்த்தைநடத்துவதற்கான ஆயத்தங்களில் இறங்கியது.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் இலங்கை இனப்பிரச்சனையைபேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க வேண்டும். புலிகள் சண்டைநிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரபாகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து, அதிபர் சந்திரிகாவிடம் தெரிவித்தார். இருப்பினும் சண்டைநிறுத்தம் செய்ய முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைகுறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே இரண்டாவது முறையாக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழு இரண்டாவது முறையாக இலங்கைக்கு வந்துள்ளது. இந்த முறை நான், புலிகள்தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் திட்டம் இல்லை.
இலங்கையில் இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதிபர்சந்திரிகாவையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் எரிக் சோல்ஹெம்.
இதற்கிடையே நார்வே தூதுக்குழுவில்