127 வயது "வாலிபரின் வாழ்க்கைச் சக்கரம் நின்றது
தாக்கா:
127 வயது வரை வாழ்ந்த வங்கதேசத்தின் மூத்த குடிமகன், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதுகுறித்து வங்கதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தியில், வடக்கு தாக்குர்கான் மாவட்டத்தைச்சேர்ந்தவர் அப்துல் பசட். குக்கிராமத்தைச் சேர்ந்த பசட்டுக்கு வயது 127. இவர் ஒரு விவசாயி.
வங்கதேசத்திலேயே மிகவும் வயதானவர் பசட். வங்கதேசத்தின் சராசரி வயது 60தான். எனவே பசட், வங்கதேசமக்களின் ஹீரோவாக மாறினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இல்லத்தில் பசட் காலமானார்.
சாதனையுடன் சாவைச் சந்தித்த பசட்டுக்கு, 60 வயதாகும் மனைவி, 7 மகள்கள் உள்ளனர். சாவதற்கு முன்பு வரைஎங்கு போனாலும் சைக்கிளில் செல்வதே பசட்டின் வழக்கம். வயல் வேலைக்கும் அவர் சைக்கிளில்தான் செல்வார்.
நீண்ட காலமாக அவர் சைக்கிளில் வந்து சென்றதே பசட் இத்தனை காலத்திற்கு வாழ்ந்ததற்குக் காரணம் என்றுஅக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.