இலங்கையைக் கலக்கும் காகங்கள்
கொழும்பு:
இலங்கையில் காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.அதே சமயம், பிற பறவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில்தான் காக்கைகள் அதிக அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்,கொழும்பு நகரில் பெருகி வரும் குப்பைகளே. சுற்றுச்சூழல் கல்விக் கழகம் என்ற அமைப்பு இந்த ஆய்வைமேற்கொண்டது.
காக்கைகள் பெருகி வரும் அதே நேரத்தில் பிற பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜெகத் குணவர்த்தனே கூறுகையில், கொழும்பு நகரில் பாஸ்ட்புட் உணவு விடுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்த விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், குப்பைகள் நகரில்அதிகமான அளவில் உள்ளது. இதன் காரணமாக இவற்றைத் தேடி அதிக அளவிலான காக்கைகள் வருகின்றன.
மேலும் காக்கைகளின் கருவுறு காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதுஜூன் முதல்வ ஆகஸ்ட் மாத வரையிலும் புதிதாக கருவுறு காலம் ஏற்பட்டுள்ளது.
காக்கைகள் நாம் நினைப்பது போல இல்லை. அவை புத்திசாலித்தனமானவை. அதன் காரணமாகவே, பிறபறவைகளை விட இவை அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. இவற்றின் பெருக்கத்தால் பிற பறவைகள் உயிர்வாழ்வது குறுகி விடும் அபாயம் உள்ளது என்றார் குணவர்ததனே.
இலங்கையில் இரண்டு வகையான காக்கைகள் உள்ளன. கருப்பு அல்லது ஜங்கிள் காக்கை மற்றும் ஹவுஸ் காக்கை.இவற்றில் முதல் வகை காக்கைகளால் பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டாவது வகை காக்கைகள் மிகவும்ஆபத்தானவை. பிற பறவைகளைத் தாக்குவது, அவற்றின் முட்டைகளை உடைப்பது, சாப்பிடுவது போன்றமூர்க்கத்தனமான குணங்கள் அவற்றிடம் உள்ளது. இதனால் எதிர்காலத்தில், பிற பறவைகளுக்கு இவை பெரும்பிரச்சினையாக இருக்கும்.
காக்கைகளை இலங்கை மக்கள் புனிதமாக கருதுகின்றனர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் காக்கைகளுக்காகசிறப்புப் பூஜைகள் கூட நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.