For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை வழக்கு .. துணை மேயரின் 5 நண்பர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியனின் ஐந்து கூட்டாளிகள், சிறப்புப்போலீஸ் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை நகர போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியைச் சேர்ந்தசகாதேவன், சேகர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், பழனியப்பன், மதுரையைச் சேர்ந்த ராமராஜன்ஆகிய ஐந்து பேரும் சிறப்புப் போலீஸ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மிசா. பாண்டியனுக்குவேண்டியவர்கள்.

மிசா. பாண்டியன், அவரது டிரைவர் ஆகியோருக்கு போலி பெயர்களில், மைசூருக்குப் போவதற்கு,பழனியப்பனும், ராஜேந்திரனும் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

சகாதேவனும், சேகரும், பாண்டியன் தங்குவதற்கு இட வசதி செய்து கொடுத்துள்ளனர். கூட்டுறவுத் துறைஊழியரான ராமராஜன், பாண்டியனுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இவர்களிடம் நடத்த விசாரணையில், பாண்டியன், அவரது டிரைவர் மற்றும் ஒரு நண்பர் ஆகியோர் சமீபத்தில்திருச்சிக்கு தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.

இவர்கள் தவிர கொலை வழக்கு தொடர்பாக மிசா. பாண்டியனின் மைத்துனர் ராஜா என்பவரையும் போலீஸார்தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X