இளங்கோவனை விரட்டாமல் ஓய மாட்டோம் .. தங்கபாலு
சென்னை:
இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டோம் என தங்கபாலுகூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இளங்கோவனுக்கு எதிராக முன்னாள் காங்கிரஸ்தலைவர்கள் தங்கபாலு. திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகியோர் அணிதிரண்டுளனர். இவர்கள் இளங்கோவனை நீக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்தனர்
ஆனால் இளங்கோவனே தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் எனசோனியா காந்தி அறிவித்ததும் காங்கிரஸ் எதிரணி தலைவர்கள் தனிக்கட்சியாகசெயல்படப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இளங்கோவன் எச்சரிக்கைவிடுத்தார். இது பற்றி தங்கபாலு ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:
எங்கள் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவனுக்கு அதிகாரம் கிடையாது. நடவடிக்கைக்குஉள்ளாக்கப்பட வேண்டியவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகஅச்சுறுத்துகின்றனர்.
எங்களுடையதுதான் உண்மையான காங்கிரஸ். உண்மையான காங்கிரஸ் விசுவாசிகள்எங்களோடு இருக்கின்றனர். கட்சிக்கு துரோகம் செய்தவரை தலைவராக ஏற்க முடியாது.எனவே இளங்கோவனை பதவி நீக்கம் செய்யும் வரை ஓய மாட்டோம் என கூறினார்.