For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி வந்தார் மொரீஷியஸ் பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மொரீஷியஸ் பிரதமர் அனீருத் ஜெகன்னாத் செவ்வாய்க்கிழமை காலை டெல்லி வந்து சேர்ந்தார்.

இந்திய பயணத்தின்போது அவர் பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடன் உயர் மட்டக் குழுவும்டெல்லி வந்துள்ளது.

மொரீஷியஸில் சைபர் சிட்டி அமைப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடவுள்ளார் ஜெகன்னாத். இதுதொடர்பாகஇந்தியத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

ராஷ்டிரபதி பவனில், மொரீஷியஸ் பிரதமரை, பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பல்வேறுஅமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.

டெல்லி வந்து சேர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகன்னாத் பேசுகையில், இந்தியா வருவதில் எப்போதுமேஎனக்கு மகிழ்ச்சிதான். இந்த முறையும் அதுபோலவே உணர்கிறேன் என்றார்.

குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் அனீருத்ஜெகன்னாத் சந்திக்கவுள்ளார். சென்னை பல்கலைக்கழகம் அனீருத் ஜெகன்னாத்திற்கு கெளவர டாக்டர் பட்டம்வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X