கும்ப்ளேவுக்கு இன்று தோள்பட்டை ஆபரேஷன்
மும்பை:
இந்தியாவின் பிரபல சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு தென்னாப்பிரிக்காவில்புதன்கிழமை அறுவை சிகிச்சை நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் சிலகாலமாக தோள்பட்டை வலியால் கஷ்டப்பட்டு வந்தார். இதற்காக அவர் கேரளாவில்ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். ஆனால் வலி குணமடையவில்லை.
இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரபல எலும்பு முறிவு அறுவைசிகிச்சை நிபுணர் பெர்கூசனிடம் சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன் படிபெர்கூசன் புதன்கிழமை கும்ளேக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்கிறார்.
பெர்கூசன் இந்திய அணி கிரிக்கெட் வீர்ரகளான அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், அஜீத்அகர்கர் ஆகியோருக்கு வெற்றி கரமாக சிகிச்சை செய்திருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அனில் கும்ப்ளேக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால்அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட மாட்டார். அவர் பரிபூரணமாககுணமடைய 4 மாதங்கள் ஆகும். இதனால் இந்தியாவில் நடைபெற இருக்கும்இங்கிலாந்து எதிரான போட்டியிலும், ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியிலும் அவர்விளையாட மாட்டார்.
இந்த ஆண்டு மே மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாட இருக்கிறது.அந்த போட்டிகளிலும் கும்ப்ளே விளையாட மாட்டார் என கிரிக்கெட் வாரியசெயலாளர் ஜெயவந்த லீலே கூறினார்.