அசாருதினின் மர்ம போன் .. மும்பை செல்கிறது ராஜ்காட் போலீஸ்
ராஜ்காட்:
1996-ம் ஆண்டு இந்திய - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியினர் தங்கியிருந்த ஒட்டலிலிருந்து அசாரூதீன்,அஜய் ஜடேஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய விவரங்கள் குறித்துவிசாரிக்க ராஜ்காட் போலீசார், மும்பை செல்லவிருப்பதாக ராஜ்காட் போலீஸ்கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் விகாஸ் என்ற வழக்கறிஞர் 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாஆடிய போட்டி ஃபிக்ஸ் செய்த போட்டி என சி.பி.ஐ. கூறியுள்ளது. இதனால், என்னைப்போன்ற பல ரசிகர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். எனவே இது குறித்த போலீஸ்விசாரணை செய்ய வேண்டும் என மனு செய்திருந்தார்.
அந்த மனுவின் பேரில் ராஜ்காட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜ்காட்டில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள்போட்டியின் போது இந்திய அணியினர் ஓட்டல் சில்வர் பேலசில் தங்கியிருந்தனர்.அப்போது அசாருதீனும், அஜய் ஜடேஜாவும் பலரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அது குறித்து விசாரிக்க ராஜ்காட் போலீஸ் மும்பைசெல்லவிருக்கிறது.
இந்த தகவலை உறுதி செய்து ராஜ்காட் போலீஸ் கமிஷனர் சுதீர் சின்ஹா அளித்தபேட்டியில் கூறியதாவது:
அசார் 6 பேருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் பெயர்கள்எங்களுக்கு கிடைத்துள்ளன. அஜய் ஜடேஜா தனது குடும்பத்தினரிடம் மட்டுமேதொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராஜ்காட் போலீஸ் சி.பி.ஐ. தயாரித்துள்ள அறிக்கையை தருமாறு கேட்டுள்ளது.ஆனால் இது குறித்து சி.பி.ஐ.யிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.
ஆனாலும் சி.பி.ஐ. மத்திய அரசிடம் தங்கள் விசாரணை குறித்து தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு அனுமத்தித்தால் தேவையான அனைத்து ஆவணங்களையும் எங்களால்பெற முடியும்.
சி.பி.ஐ.யிடம் இருக்கும் ஆவணங்கள் எங்கள் விசாரணைக்கு பெரிதும் உதவும்.மிண்டும் சி.பி.ஐ-க்கு இது குறித்து நினைவூட்டவிருக்கிறோம் என கூறினார்