இலங்கை அணிக்கு தெ. ஆப்பிரிக்க தமிழர்கள் எதிர்ப்பு
டர்பன்:
தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், அங்கு இலங்கைகிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இலங்கையை பூர்விகமாக கொண்ட அதிகமான தமிழர்கள்வாழ்ந்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் தென்ஆப்பிரிக்காவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டித்தொடர் முடியும் தருவாயில் இருக்கிறது.
இதற்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இலங்கை அணிக்கு தென்னாப்பிரிக்கா தடைவிதிக்க வேண்டும் என அவர்கள்வற்புறுத்தி வருகிறார்கள்.
இலங்கை அரசு இன வெறிதாக்குதலில் பல தமிழர்களை கொன்று வருகிறது. இலங்கைஅணியின் வருகையை ஆதரித்தால் அவர்கள் செய்யும் அடக்குமுறையை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும் என தென்னாப்பிரிக்க தமிழர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்சிவப்பா கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகி சுந்தர ரெட்டிகூறியதாவது:
தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை அணி வருவதால் ஏற்படும் எதிர்ப்புகள்எதிர்பார்த்துதான். சர்வ தேச போட்டிகளில் விளையாட தடைவிதிப்பதென்றால் அதைஐ.சி.சிதான் செய்ய வேண்டும்.
இது போன்ற தடையை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரிஐ.சி.சி விதிக்காத வரை இலங்கை அணி விளையாடுவதை நாங்கள் தடுக்க முடியாதுஎன கூறினார்.